நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.


தங்கத்தின் விலை இன்று (31) 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 165,600 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 180,000 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் தங்கத்தின் விலையும் 25 டொலர்களால் அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்று (30) 1,983 டொலர்களாக பதிவாகியுள்ளது.