மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் புதிய அலுவலகக் கட்டிடத் திறந்து வைப்பு

 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.



மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளரும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமான அகிலா கனகசூரியம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் கலந்து சிறப்பித்தார்.


அதிகள் வரவேற்பு, தேசிய கொடியேற்றம் தேசிய கீதம், வலய கீதம் இறைவணக்கம் போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பட்டிருப்பு  வலயக்கல்விப் பணிப்பாளா சி. சிறிதரன், முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் கே. சத்தியநாதன் மற்றும் பொறியியலாளர்கள்,  பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது பாடசாலை மாணவர்களின் நடனங்களும் இடம் பெற்றது.