ரணிலின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடிக்க ஒன்றுபடுங்கள் ; சந்திரிக்கா அழைப்பு !

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பயமுறுத்துவதாகவும், சட்டமூலத்தை தோற்கடிக்க அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “எங்களுடைய அரசியல் விசுவாசங்களை ஒதுக்கிவிட்டு, இந்த இடத்தில் நாம் அனைவரும் சமூக ஆர்வலர்கள் என்பதை அங்கீகரிப்போம். இதை முறியடிக்க நாம் ஒன்றுபட வேண்டும்” என்றார்.

“இது ஒரு பயமுறுத்தும் சட்டமூலம் மற்றும் இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“இந்த விதத்தில் இன்று நாங்கள் இங்கு பேசுவது போல் சுதந்திரமாக பேச முடியாது. ஜனநாயகத்திற்கு இடமில்லை, அவர்கள் நம் அனைவரையும் கைது செய்வார்கள்” என்றரர்.

அரகலய இலங்கைக்கு ஒரு பெறுமதியான பாடத்தை கற்பித்ததாகவும்,”மக்கள் ஒன்றிணைந்து ஒரு மாற்றத்தை வலுவாகக் கோரினால், மாற்றத்தை அடைய முடியும்.”

“அப்படியானால், அது அரகலய அல்லது புரட்சி மூலம், நாம் ஏதாவது செய்ய வேண்டும்”, எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.