தூக்கிட்டு மாணவன் தற்கொலை காத்தான்குடியில் சம்பவம்!

(மண்டூர் ஸமி)

காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று (19) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

சரீப் பிறக்டர் விதி காத்தான்குடி-02 பிரதேசத்தைச் சேர்ந்த (19) வயதுடைய முகம்மது கரிலீதீன் முகம்மது கிபாஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது தந்தையை இழந்த குறித்த மாணவன் அதனாலே மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதற்கு முன்னர் பல தடவை தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் சம்ப தினத்தில் தனது வீட்டில் யாரும் இல்லாத வேளை தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்ர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.; காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.