கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், கார் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த கடவையின் ஊடாக கார் ஒன்று கவனக்குறைவாக பயணிக்க முற்பட்ட போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் பின்னர் காருக்குள் இருந்த இருவரும் காரின் உள்ளேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது