பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் விரைவாகத் தலையிட்டு தீர்வுகளை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தினால் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அதன் தலைவர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், தொழிற்சங்கங்கள் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடும் என பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க குறிப்பிட்டுள்ளார்.