ஹரக்கட்டாவின் வலையமைப்புடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

ஹரக்கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவுக்கு  உட்பட்ட மிரிஹான பிரிவில் கடமையாற்றி வருகிறார்.

கான்ஸ்டபிளுடன் கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபரிடமிருந்து 74 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கார் ஒன்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.