QR முறையை மீறியதால் தடை செய்யப்பட்ட 40 'சிபெட்கோ' எரிபொருள் நிலையங்களுக்கு எதிர்வரும் 12 முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம்!


QR விதிமுறையை மீறி எரிபொருள் விற்பனை செய்ததற்காக தடை செய்யப்பட்ட 40 'சிபெட்கோ' எரிபொருள் நிலையங்களுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஒரு வாரத்துக்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்த அந்த அதிகாரி, எதிர்வரும் 11ஆம் திகதியன்று ஒரு வாரம் நிறைவடைகிறது என்றும், 12ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.