போதைப்பொருட்களைப் பாவித்த நிலையில் பஸ்களைச் செலுத்தியதாகக் கூறப்படும் 15 பஸ் சாரதிகள் கடந்த இரு தினங்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருட்களைப் பாவித்த நிலையில் பஸ்களைச் செலுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேல்மாகாணத்தை மையமாகக் கொண்டு 106 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாரின் பங்களிப்புடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
775 பஸ்களை சோதனை செய்து, அந்த பஸ்களின் சாரதிகளின் எச்சிலை சோதனை செய்ததில், இவர்களில் 15 சாரதிகள் போதைப்பொருள் பாவித்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, போதைப்பொருட்களைப் பாவித்த நிலையில் வாகனங்களைச் செலுத்திய சாரதிகளின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.