சுற்றுலா விசாவில் மலேஷியா சென்று தொழில் புரிந்த இலங்கைப் பெண் மாடியிலிருந்து வீழ்ந்து பலி!

சுற்றுலா விசாவில் மலேஷியா சென்று அங்கு தொழில் புரிந்த  44 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 23ஆம் திகதி இரவு மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொபேகனில் வசித்து வந்த 44 வயதுடைய திருமணமான ரேணுகா நிலாந்தி பண்டார என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஜா-எல பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குநர் மூலம் அவர் சுற்றுலா விசாவில் மலேஷியா சென்றுள்மை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.