குழந்தைகளிடையே தோல் நோய்கள் பரவும் அபாயம்!




தற்போது வெப்பமான காலநிலையால் சிறு குழந்தைகளுக்கு தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

வறண்ட காலநிலையுடன் நீர்ப்போக்கு போன்ற நிலைமைகளும் குழந்தைகளிடம் காணப்படுவதாக நிபுணர் கலாநிதி தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.