கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் சம்பவம் : அறிக்கை கோரினார் பொது பாதுகாப்பு அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொலிஸாருக்கு இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் அறிவுறுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நாளை (திங்கடகிழமை) நீதிமன்றில் உண்மைகளை அறிவிக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை புலனாய்வாளர் தாக்கிச் சுட முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக காணொளிகள் வெளியாகி இருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வடமாச்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.