அவசரகால அனர்த்தங்களை எதிர்கொள்ள பரீட்சைகள் திணைக்களம் தயார் நிலையில் உள்ளது : பரீட்சைகள் திணைக்களம்!

அவசர அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏனைய குழுக்களுடன் இணைந்து பரீட்சார்த்திகளை படகுகள் மூலம் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்து வர முடிந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமைக்குள் நிலைமை குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.