தயாசிறி கட்சியில் இணையலாம் ஆனால் பதவி வழங்கப்படமாட்டாது! - மைத்திரிபால சிறிசேன!



பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை எந்த நேரத்திலும் கட்சியில் இணைத்து கொள்ளலாம். அவரை ஏற்றுக் கொள்ளத் தயார். ஆனால் அவருக்கு எந்தப் பதவியையும் வழங்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் உப அமைப்புப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்கும் தீர்மானம் தொடர்பில், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி விரிவாக விளக்கினார்.