பொலிஸ்பொதுமக்களுக்கிடையிலான நட்புறவை வளர்க்கும் நோக்குடன் பொதுமக்களின் நலன்கருதி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தினால்
ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவை அண்மையில் ஒலுவில்,அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஜி.றசீன் முகம்மதுவின் நெறிப்படுத்தலின் கீழ் பொலிஸ் நிலையம் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி,பொலிஸ் இன்ஸ்பெக்டர் எம்.ஏ.எம்.நஜீப் தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் உட்பட பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள்,கிராமசேவை உத்தியோகத்தர்கள்,திணைக்களங்களின் பிரதிநிதிகள்,சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஒலுவில்,பாலமுனை,அட்டாளைச்சேனை,திராய்க்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். இச் சேவையில் தொலைந்துபோன ஆளடையாள அட்டை,கடவுச்சீட்டு,சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றிற்கு பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதிகள் வழங்கப்பட்டன.மேலும் பிறப்பு,இறப்பு பதிவுகள்,இலவச சட்ட ஆலோசனைகள்,இலவச வைத்திய முகாம்,பாடசாலை மாணவர்களுக்கான இலவச மூக்குக் கண்ணாடி விநியோகம்,மோட்டார் போக்குவரத்து ஆலோசனைகள்,சுகாதார ஆலோசனைகள் போன்ற சேவைகள் இடம்பெற்றன.
ஒலுவில் கிராமிய சிவில் பாதுகாப்புக் குழுக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில் 1000 இற்கு மேற்பட்ட மக்கள் நன்மையடைந்தனர்.சம்பத் வங்கியினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.100 இற்கு மேற்பட்ட பொலிஸார் இச்சேவையில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களுக்கு உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவை அண்மையில் ஒலுவில்,அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதில் ஒலுவில்,பாலமுனை,அட்டாளைச்சேனை,திராய்க்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். இச் சேவையில் தொலைந்துபோன ஆளடையாள அட்டை,கடவுச்சீட்டு,சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றிற்கு பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதிகள் வழங்கப்பட்டன.மேலும் பிறப்பு,இறப்பு பதிவுகள்,இலவச சட்ட ஆலோசனைகள்,இலவச வைத்திய முகாம்,பாடசாலை மாணவர்களுக்கான இலவச மூக்குக் கண்ணாடி விநியோகம்,மோட்டார் போக்குவரத்து ஆலோசனைகள்,சுகாதார ஆலோசனைகள் போன்ற சேவைகள் இடம்பெற்றன.
ஒலுவில் கிராமிய சிவில் பாதுகாப்புக் குழுக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில் 1000 இற்கு மேற்பட்ட மக்கள் நன்மையடைந்தனர்.சம்பத் வங்கியினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.100 இற்கு மேற்பட்ட பொலிஸார் இச்சேவையில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களுக்கு உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.