இலாபம் ஈட்டும் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை


வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை தற்போது இலாபம் ஈட்டி வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
 
தொழிற்சாலையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட பழைய கடன்களை செலுத்தி நிறைவு செய்துவிட்டு, புதிய உற்பத்தி இயந்திரத்தை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தனது முகநூல் கணக்கில் ஒரு பதிவை வௌியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், பாசிக்குடா நகரில் ஒரு விசேட சுற்றுலா நிலையமொன்றை நிறுவ திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.