தன்னாமுனையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் படுகாயம்!

(சுழற்சி நிருபர்;)  மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனையில் இன்று சனிக்கிழமை 26.07.2014 பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளைவீதி - கோப்பாவெளி எனும் கிராமத்தில் வசிக்கும் முருகுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை (வயது 48) என்பவரே விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
முச்சக்கரவண்டியில் மேற்படி பெண் சென்று கொண்டிருக்கும்போது முச்சக்கர வண்டி வீதியருகில் இருந்த மரத்தில் மோதியுள்ளது. அதன்போது வீதியால் வந்து கொண்டிருந்த சைக்கிளையும் முச்சக்கர வண்டி மோதிச் சென்றுள்ளது.
இந்த விபத்தில் சைக்கிளோட்டியும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.