1983ம் ஆண்டு யூலைக் கலவரத்தின் போது வெலிகடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களான குட்டிமணி, தங்கதுரை ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2014.07.27ம் திகதி மாலை தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.குணசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவர்களுமான கோவிந்தம் கருணாகரம் (ஜனா), பிரசன்னா இந்திரகுமார் மற்றும் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உப செயலாளர் ஆர்.சற்குணராசா (திலக்), அம்பாறை மாவட்ட செயலாளர் கே.லோகநாதன் (நாதன்), அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தளபதிகளான தங்கதுரை, குட்மணி ஆகியோரின் உருவப்படங்களுக்கு விளக்கேற்றி மலர்மாலை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு மிகவும் எளிமையான முறையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4