அமரத்துவமடைந்த ஸ்ரீராசசிங்கம் அவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனையும் நினைவு பேரூரையும்

(படுவான் பாலகன்) நேற்றைய தினம் நிய+சிலாந்தில் அமரத்துவமடைந்த திரு.எஸ். ஸ்ரீராசசிங்கம்; சிறந்த கணித ஆசிரியராகவிருந்து பல பொறியிலாளர்கள், பட்டாதாரிகளை உருவாக்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் இருந்து சிறந்த சேவைபுரிந்ததுடன் இறுதியாக கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியின் அதிபராகவும் கடமைபுரிந்தார்.

அன்னார் அதிபராக மட்/முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் 1983.05.01 – 1984.09.16 வரை தனது சேவையாற்றியிருந்தார் அன்னாரது ஆத்மா சாந்தி வேண்டி இன்று(18) வியாழக்கிழமை மட்/முதலைக்குடா மகா வித்தியாலய அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோர் இணைந்து ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்திததுடன் வித்தியாலய அதிபர் திரு.சி.அகிலேஸ்வரன் அவர்களால் நினைவு பேரூரையும் நிகழ்த்தப்பட்டது.