அனர்த்தத்தினால் நிர்கதியாகியுள்ளோருக்கு கி.மா.பாலர் பாடசாலை பணியக உத்தியோகத்தர்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் உதவி வழங்கிவைப்பு

(எஸ்.சதீஸ்)
பதுளை மாவட்டத்தில் மண்சரிவு, மழை அனர்த்தத்தினால் நிர்கதியாகியுள்ள மக்களுக்காக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப் பணிக்கு, கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தின் உத்தியோகத்தர்களின் பங்களிப்பில் குடிநீர்,பற்பசை,பற்தூரிகை,சவற்காரம், மெழுகுதிரி,சித்தாலேப,தீப்பெட்டி, பனடோல் மற்றும் சிறுவர்களுக்கான பிஸ்கட் வகைகள் உட்பட ஒரு தொகுதி  நிவாரணப் பொருட்களை இன்று  ஒப்படைத்துள்ளனர்.

இவ் நிவாரணப் பொருட்களை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ. தவராஜாவிடம் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் ஒப்படைத்தார்.

இதன்போது உதவி பிரதேச செயலாளர் யோகராஜா அவர்களும் கலந்துகொண்டார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ் நிவாரணப்பணிக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான  நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இவர்களது இப்பணி தெடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பிரதேச செயலாளர் வெ.தவராஜா தெரிவித்தார்.