இளைஞர் கடத்தப்பட்டு கைகளில் வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

(ஜே.எப்.காமிலா  பேகம்)

 கல்குடா  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மருத  நகரை சேர்ந்த   ஜெயகாந்தன் ஜெயரட்ணம் (வயது 21)   என்பவர்      பேத்தாளை மீன் சந்தையில் இன்று காலை பத்து மணியளவில் ஏழு பேர் கொண்ட ஒரு அரசியல் குழுவினரால்  கடத்தப்பட்டு,  கைகளில்  வெட்டப்பட்ட  நிலையில்   மாலை  5  மணியளவில்  வாழைச்சேனை  வைத்தியசாலையில்   அனுமதிக்கப்பட்டுள்ளார்.  
 இதற்கு  அரசியல்  பழிவாங்கலே   காரணம்  என  நம்பப்படுகிறது. இது  குறித்து மேலதிக  விசாரனைகளை பொலிஸார்  மேற்கொண்டு  வருகின்றனர்.