மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி கிரானில் சம்பவம்


(பேரின்பராஜா சபேஷ்) மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் கிரான் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில்  இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான வீதி சுங்கான்கேணியைச் சேர்ந்த ஆதித்தன், ஜெயபிரதாப் ஆகியோரே  இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


வந்தாறுமூலையில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டு விழாவிற்கு சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வழியிலேயே
மோட்டார் சைக்கிளில்  வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமுற்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் தற்போது வாழைச்சேனை  வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.