சடலம் ஏற்றி வந்த வாகனம் மோதியதில் முச்சக்கர வண்டிச் சாரதி பலி

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகரத்தின் கொழும்பு மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டிச் சாரதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை 3.30 மணியளவில் வீதியின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் சடலம் ஒன்றை ஏற்றிவந்த கார் ஒன்று மோதியுள்ளது.
இதில் முச்சக்கர வண்டிச் சாரதியான ஏறாவூர் பெண் சந்தை வீதியைச் சேர்ந்த நாகூர் முஹம்மது ஸஹாப்தீன் (வயது 50) என்பவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.


சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைகக்ப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியுடன் மோதிய, சடலத்தை ஏற்றிவந்த கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏறாவூர் பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தற்சமயம் விபத்து நடந்த அதே இடத்தில் கடந்த ஆண்டு ஒரு விபத்து இடம்பெற்றது. அதில் தற்சமயம் விபத்தில் மரணித்த முச்சக்கர வண்டிச்; சாரதி ஏறாவூர் மக்கள் வங்கிக் கிளை முகாமையாளராகக் கடமையாற்றிய முஹம்மத் பாறூக் என்பவர் மீது மோதியதில் வங்கி முகாமையாளர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டிருந்தார். அந்த விபத்து பொழுது புலரும் வேளையில் இடம்பெற்றிருந்தது.