தந்தையைக் கொலை செய்துவிட்டு புகையிரதத்தின் முன்னால் பாய்ந்து மகன் தற்கொலை

(ஏ.எச்.ஏ. ஹுஸைன், சிவம்  ) மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுளள் திருப்பெருந்துறை எனும் கிராமத்தில் தந்தையை தாக்கிக் கொலை செய்து விட்டு தனயனும் புகையிரதத்தின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் புதன்கிழமை கிழமை மாலை இடம்பெற்றுள்ளது என்று மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.


திருப்பெருந்துறை கிராமத்தை சேர்ந்த ஞானமுத்து விஜயன் (வயது 62) எனும் 6 பிள்ளைகளின் தந்தையை அவரது மூத்த தனயன் கடுமையாகத் தாக்கியதன் காரணமாக தந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக  கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

தனது தந்தை மரணமடைந்ததைக் கேள்வியுற்ற மகன் விஜயன் இருதயநாதன் வயது (23)  நேற்று இரவு 8.00 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இருவரது சடலங்களும் மட்டக்களப்பு போதனா வைத்திசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.