யாழ்ப்பாணம் புங்குடுதீவுப்பகுதியில் கடந்த புதன்கிழமை காணாமல்போயிருந்த பாடசாலை மாணவி நேற்று முன்தினம் வியாழக்கிழமை சடலமாக
மீட்கப்பட்ட சம்பவமானது பெரும் பதற்றத்தை அப்பகுதியில்
ஏற்படுத்தியிருக்கிறது.
புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற 18 வயதுடைய மாணவியே இவ்வாறு பாலியல்
வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவராவார். புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் உயர்தரப்பிரிவில் கல்வி கற்கும் இந்த மாணவி கடந்த புதன்கிழமை காலை 7.30 மணியளவில் பாடசாலைக்கு சென்றுள்ளார். மாலை வரை மாணவி வீடு திரும்பாததையடுத்து பெற்றோர்கள் அன்றிரவு
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
வியாழக்கிழமை காலை புங்குடுதீவு எட்டாம் வட்டாரத்திலுள்ள கைவிடப்பட்ட வீடொன்றுக்கு அருகிலுள்ள பற்றைக்குள் இருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் மாணவியின் சைக்கிள் மற்றும்
புத்தகப் பை என்பன காணப்பட்டுள்ளன. மாணவியின் பாடசாலை சீருடையின் இடுப்புப் பட்டியை அறுத்து கால்கள் இரண்டையும் மரத்துடன் வைத்து
கட்டியதுடன் கழுத்துப்பட்டியை அவிழ்த்து கைகளும் கட்டப்பட்டிருந்த
நிலையிலேயே மாணவி மீது பாலியல்துஷ்பிரயோகம் இடம் பெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனையில் மாணவி பாலியல்
வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
மூச்சுத்திணறவைத்தே மாணவி கொல்லப்பட்டுள்ளமையும்
நிரூபணமாகியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பில் மூவரை ஊர்காவற்றுறைப் பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து உரிய வகையில் நீதியை நிலைநாட்டக்கோரியும் மாணவியின் படுகொலையைக் கண்டித்தும் புங்குடுதீவுப்பகுதியில் மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
நேற்று மாணவியின் படுகொலையைக் கண்டித்து ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடைகளை மூடி பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி படுபாதகமாக கொலை செய்யப்பட்டமை குறித்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரையில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் படுகொலைகளும் கொள்ளைகள் உட்பட குற்றச்செயல்கள் தொடர்ந்தும் இடம் பெற்றே வருகின்றன.
கடந்த வருடம் யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 9, 11 வயது பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.
பாடசாலைக்கு சென்ற மாணவிகள் கடற்படையினரால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அத்துடன் கடற்படையினர் சிலரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். பாடசாலைக்கு செல்வதாக கூறி செல்லும்
சிறுமிகளிடம் ஆசைவார்த்தைகளைக் கூறி கடற்படை சிப்பாய்கள் சிலர் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழ் பெண்கள் பெருமளவு பாதிப்புக்களை சந்தித்து வந்தனர். வடக்கு, கிழக்கில் பல்வேறு பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. இதனை கட்டுப்படுத்த முடியாது கடந்த காலத்தில் அரசாங்கங்கள் திண்டாடி வந்தன. இதேபோல இறுதி யுத்தகாலத்திலும் பெண்கள் மீது பாலியல் வல்லுறவு உட்பட பாலியல் துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென்று ஐ.நா. மனித உரிமை பேரவையும் கோரிக்கை விடுக்குமளவுக்கு நிகழ்வுகள் இடம்பெற்றன.
குடாநாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதி யில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமாரசாமி படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவரைத்தேடிச் சென்ற அவரது தாயார் மற்றும் தம்பியார், அயலவர் என மூவர் படையினரால் கொல்லப்பட்டு முகாமுக்குள்ளேயே புதைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளான நான்கு இராணுவத்தினருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனையும் வழங்கியிருந்தது. இவ்வாறு மரணதண்டனை தீர்ப்பு வழங்கியபோது வழக்கின் முதல் குற்றவாளியான கோப்ரல் ராஜபக் ஷ செம்மணி புதைகுழி தொடர்பான தகவல்களை வெளியிட்டிருந்தார். இதனையடுத்தே செம்மணி புதைகுழி தோண்டப்பட்டிருந்தது.
இதேபோல் கோண்டாவிலில் ரஜனி என்ற பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டிருந்தார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இவ்வாறான பெருமளவு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் குடாநாட்டிலும் வன்னிப் பகுதியிலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தேர்ச்சியாக நடைபெற்று வந்தமையானது பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு உதாரணமாக காரைநகர் பகுதி யில் இரண்டு சிறுமிகள் படைத்தரப்பினரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதைக் குறிப்பிடலாம். வடக்கு, கிழக்கில் இவ்வாறு வேலியே பயிரை மேயும் சம்பவங்கள் இடம்பெற்றே வருகின்றன.
ஆனால் புங்குடுதீவில் பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் படைத்தரப்பினர் சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்லை. அப்பகுதியைச் சேர்ந்த மூவரையே பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்திருக்கின்றனர்.
யுத்தம் முடிவடைந்தபோதிலும் குடாநாட்டில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றமையினால் மக்கள் மத்தியில் அச்சநிலையே தோன்றியிருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலீற்றா (வயது 22) என்ற யுவதியின் சடலம் கிணற்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்டிருந்தது. இந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இவ்விவகாரமும் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மிகவும் குறைந்தநிலையிலேயே காணப்பட்டன. யுத்தத்தின்போது வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றன. இத்தகைய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உரிய ந.டவடிக்கைகள் எடுக்கப்படாதநிலையில் தொடர்ந்தும் பெண்கள் மீதான வன்முறைகள் அங்கு அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமேயாகும்.
புங்குடுதீவில் பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைப் போன்ற கொடூரங்கள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது. இத்தகைய சம்பவங்களை முற்றுமுழுதாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான கொடூர சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்பட்டு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம்தான் குறித்த தண்டனையானது ஏனையவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.
வடக்கு, கிழக்கில் போதைவஸ்து பாவனையும் மதுபாவனையும் அதிகரித்து வருகின்றன. வடக்கில் குறிப்பாக குடாநாட்டை எடுத்துக்கொண்டால் போதைவஸ்து பாவனையானது பாடசாலை மட்டத்திலேயே அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் மற்-றும் பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்களுக்கு போதைவஸ்து பாவனையும் ஒரு வகையில் காரணமாகவே அமைகின்றன.
குடாநாட்டில் குற்றச்செயல்களை ஒழிக்கவேண்டுமானால் போதை வஸ்து பாவனையை ஒழிக்கவேண்டும். அத்துடன் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.
புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்தத்தண்டனை மற்றைய வர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.
மீட்கப்பட்ட சம்பவமானது பெரும் பதற்றத்தை அப்பகுதியில்
ஏற்படுத்தியிருக்கிறது.
புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற 18 வயதுடைய மாணவியே இவ்வாறு பாலியல்
வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவராவார். புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் உயர்தரப்பிரிவில் கல்வி கற்கும் இந்த மாணவி கடந்த புதன்கிழமை காலை 7.30 மணியளவில் பாடசாலைக்கு சென்றுள்ளார். மாலை வரை மாணவி வீடு திரும்பாததையடுத்து பெற்றோர்கள் அன்றிரவு
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
வியாழக்கிழமை காலை புங்குடுதீவு எட்டாம் வட்டாரத்திலுள்ள கைவிடப்பட்ட வீடொன்றுக்கு அருகிலுள்ள பற்றைக்குள் இருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் மாணவியின் சைக்கிள் மற்றும்
புத்தகப் பை என்பன காணப்பட்டுள்ளன. மாணவியின் பாடசாலை சீருடையின் இடுப்புப் பட்டியை அறுத்து கால்கள் இரண்டையும் மரத்துடன் வைத்து
கட்டியதுடன் கழுத்துப்பட்டியை அவிழ்த்து கைகளும் கட்டப்பட்டிருந்த
நிலையிலேயே மாணவி மீது பாலியல்துஷ்பிரயோகம் இடம் பெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனையில் மாணவி பாலியல்
வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
மூச்சுத்திணறவைத்தே மாணவி கொல்லப்பட்டுள்ளமையும்
நிரூபணமாகியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பில் மூவரை ஊர்காவற்றுறைப் பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து உரிய வகையில் நீதியை நிலைநாட்டக்கோரியும் மாணவியின் படுகொலையைக் கண்டித்தும் புங்குடுதீவுப்பகுதியில் மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
நேற்று மாணவியின் படுகொலையைக் கண்டித்து ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடைகளை மூடி பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி படுபாதகமாக கொலை செய்யப்பட்டமை குறித்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரையில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் படுகொலைகளும் கொள்ளைகள் உட்பட குற்றச்செயல்கள் தொடர்ந்தும் இடம் பெற்றே வருகின்றன.
கடந்த வருடம் யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 9, 11 வயது பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.
பாடசாலைக்கு சென்ற மாணவிகள் கடற்படையினரால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அத்துடன் கடற்படையினர் சிலரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். பாடசாலைக்கு செல்வதாக கூறி செல்லும்
சிறுமிகளிடம் ஆசைவார்த்தைகளைக் கூறி கடற்படை சிப்பாய்கள் சிலர் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழ் பெண்கள் பெருமளவு பாதிப்புக்களை சந்தித்து வந்தனர். வடக்கு, கிழக்கில் பல்வேறு பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. இதனை கட்டுப்படுத்த முடியாது கடந்த காலத்தில் அரசாங்கங்கள் திண்டாடி வந்தன. இதேபோல இறுதி யுத்தகாலத்திலும் பெண்கள் மீது பாலியல் வல்லுறவு உட்பட பாலியல் துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென்று ஐ.நா. மனித உரிமை பேரவையும் கோரிக்கை விடுக்குமளவுக்கு நிகழ்வுகள் இடம்பெற்றன.
குடாநாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதி யில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமாரசாமி படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவரைத்தேடிச் சென்ற அவரது தாயார் மற்றும் தம்பியார், அயலவர் என மூவர் படையினரால் கொல்லப்பட்டு முகாமுக்குள்ளேயே புதைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளான நான்கு இராணுவத்தினருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனையும் வழங்கியிருந்தது. இவ்வாறு மரணதண்டனை தீர்ப்பு வழங்கியபோது வழக்கின் முதல் குற்றவாளியான கோப்ரல் ராஜபக் ஷ செம்மணி புதைகுழி தொடர்பான தகவல்களை வெளியிட்டிருந்தார். இதனையடுத்தே செம்மணி புதைகுழி தோண்டப்பட்டிருந்தது.
இதேபோல் கோண்டாவிலில் ரஜனி என்ற பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டிருந்தார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இவ்வாறான பெருமளவு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் குடாநாட்டிலும் வன்னிப் பகுதியிலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தேர்ச்சியாக நடைபெற்று வந்தமையானது பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு உதாரணமாக காரைநகர் பகுதி யில் இரண்டு சிறுமிகள் படைத்தரப்பினரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதைக் குறிப்பிடலாம். வடக்கு, கிழக்கில் இவ்வாறு வேலியே பயிரை மேயும் சம்பவங்கள் இடம்பெற்றே வருகின்றன.
ஆனால் புங்குடுதீவில் பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் படைத்தரப்பினர் சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்லை. அப்பகுதியைச் சேர்ந்த மூவரையே பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்திருக்கின்றனர்.
யுத்தம் முடிவடைந்தபோதிலும் குடாநாட்டில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றமையினால் மக்கள் மத்தியில் அச்சநிலையே தோன்றியிருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலீற்றா (வயது 22) என்ற யுவதியின் சடலம் கிணற்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்டிருந்தது. இந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இவ்விவகாரமும் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மிகவும் குறைந்தநிலையிலேயே காணப்பட்டன. யுத்தத்தின்போது வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றன. இத்தகைய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உரிய ந.டவடிக்கைகள் எடுக்கப்படாதநிலையில் தொடர்ந்தும் பெண்கள் மீதான வன்முறைகள் அங்கு அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமேயாகும்.
புங்குடுதீவில் பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைப் போன்ற கொடூரங்கள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது. இத்தகைய சம்பவங்களை முற்றுமுழுதாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான கொடூர சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்பட்டு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம்தான் குறித்த தண்டனையானது ஏனையவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.
வடக்கு, கிழக்கில் போதைவஸ்து பாவனையும் மதுபாவனையும் அதிகரித்து வருகின்றன. வடக்கில் குறிப்பாக குடாநாட்டை எடுத்துக்கொண்டால் போதைவஸ்து பாவனையானது பாடசாலை மட்டத்திலேயே அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் மற்-றும் பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்களுக்கு போதைவஸ்து பாவனையும் ஒரு வகையில் காரணமாகவே அமைகின்றன.
குடாநாட்டில் குற்றச்செயல்களை ஒழிக்கவேண்டுமானால் போதை வஸ்து பாவனையை ஒழிக்கவேண்டும். அத்துடன் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.
புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்தத்தண்டனை மற்றைய வர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.