மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் ஆசிரியர் தினம் அனுஷ்டிப்பு
(சிவம்)
மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய கல்லூரியின் ஆசிரியர் தின விழா இன்று செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்கு மாணவர்களால் மாலைகள் மற்றும் பூச்செண்டுகள் வழங்கிக் கௌரவித்து காந்திப் பூங்காவிலிருந்து ஊர்வலமாக கல்லூரி வரை அழைத்து வரப்பட்டனர்.
வண்ணத்துபூச்சிகள் சிறுவர் சமாதானப் பூங்காவின் பணிப்பாளரும், பழைய மாணவர் சங்கத் தலைவருமான ஜேசுசபைத் துறவி போல் சற்குணநாயகம் ஆசிரியர்களுக்கு நினைவுச' சின்னங்களை வழங்கி வைத்தார்.