தமிழீழ மண் மீட்புப் போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு
(சிவம்)
தமிழீழ மண்மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த விடுதலைப்புலிகள் அமைப்பின் மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (27) மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட தமழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரனின் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
முன்னாள் நாடாழுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா. அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரக்குமார், மாகாணசபை உறுப்பினர் மா. நடராசா ஆகியோர் ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதன் போதுமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன்இ அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ரயில் முன் பாய்ந்து உயிரை தியாகம் செய்த மாணவன் இ.செந்தூரனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.