மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் ஆசிரியரினால் தாக்கப்பட்ட தரம் 7 மாணவன் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனின் பெற்றோர் இல்லாததால் அம்மம்மாவின் பராமரிப்பிலே வளர்கிறான் .
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது .
செவ்வாய்க்கிழமை அன்று பாடசாலையில் இரு மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர் . இதன் போது ஒரு மாணவன் அடிக்க குறித்த மாணவன் மண்ணை அள்ளி வீசியுள்ளார்.
இதனை கண்ட ஆசிரியர் மாணவனை கூப்பிட்டு இரு கன்னத்திலும் அறைந்ததுடன் , மூங்கில் தடியினாலும் அடித்துள்ளார் இதன்போது
மாணவனின் உடலில் தழும்பு உள்ளதுடன் காலில் காயமும் ஏற்பட்டுள்ளது .
அதே பாடசாலையில் கடமை புரியும் ஆசிரியை ஒருவர் மாணவனை எழுப்பி தண்ணீரால் முகத்தை கழுவி சித்தாலேப பூசியுள்ளார்.
இவ்வாறு சிறுவன் தனக்கு நடந்த சம்பவத்தை கூறினார் .
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4