மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் பக்தி இன்னிசை விருந்தளிப்பதற்காக ரி.எம்.எஸ். பால்ராஜ் வருகை




(சிவம்)

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் பேராலயத்தில் நாளை (31)  8; ஆம் நாள் உபயகாரரான ஏழூர் மக்களின் ஆதரவில் நடைபெறும்  திருவிழாவில் மட்டக்களப்பு கல்முனை சொர்ணம் நகை மாளிகையின் பிரதான அனுசரணையில் இரவு 10.00 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெறும்.

சதாவின் சுப்பர் சங்கித் இசைக் குழுவினருடன் இணைந்து பக்தி இன்னிசை விருந்தளிப்பதற்காக இந்தியாவிலிருந்து இன்று (30) கட்டுநாயக்கா விமான நிலையம் வருகை தந்த ரி.எம். சௌந்தரராஜனின் புதல்வன் ரி.எம்.எஸ். பால்ராஜை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் சிலோன் ஆர்ட் கிரியேசன்ஸ் தலைவருமான கே.ரி. பிரசாத் வரவேற்றார்.