மட்-வின்சென்ற் மகளீர் தேசிய பாடசாலையில் இடம்பெறவுள்ள இரத்தான நிகழ்வு

(வேணு)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக மட்- வின்சென்ற தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததானம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 05.12.2016 அன்று காலை 8.30 மணிமுதல் இடம்பெறவுள்ளது.

இவ் சமூக நிகழ்வில்  வின்சென்ற் தேசிய பாடசாலையின் பழைய மாணவிகளையும் கல்வி கற்கும் மாணவிகளின் பெற்றோர்களையும் சமூக சேவையாளர்களையும் பொதுமக்களையும் இதில் கலந்து கொண்டு “உதிரம் கொடுப்போம்” உயிரைக் காப்போம் எனும் புண்ணிய நிகழ்வில் இணையுமாறு தங்களை அன்புடன் வேண்டி நிற்கின்றனர் பழைய மாணவர் சங்கத்தினர்.

இதேவேளை இரத்த நன்கொடையாளர் மருத்துவ ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி சமூகமளிக்குமாறு தயவாகக் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

“நாம் வழங்கும் உதிரம் பல உயிர்களைக் காப்பாற்றும் அதில்
        நாமொருவராக இணைவோம்”