பட்டிப்பளைப் பிரதேச செயலகத்தில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று(25) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கென முதல் கட்டமாக 20 மில்லியன் நிதியொதுக்கப்பட்டுள்ளது.


பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கட்டிடத்திற்கான அடிக்கல்லினை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய குரு வ.சோதிலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் சறோசாதேவி சாள்ஸ், பிரதம கணக்காளர் நேசராசா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், செயலக உதவி பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரன், உதவி திட்டதிடல் பணிப்பாளர்களான எஸ்.பிரபாகரன், கே.குணரெத்தினம், கட்டிட பொறியிலாளர் கிலக்சன் ஆகியோர் கலந்து கொண்டு நாட்டி வைத்தனர்.