தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் கல் உற்பத்திநிலையம் திறந்து வைக்கப்பட்டது.


(மட்டக்களப்பு மேலதிக நிருபர்)

 தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட செங்கல் மற்றும் சீமெந்து கல் உற்பத்தி நிலையம்  இன்றைய தினம் உத்தியோகபூர்வமாகத்திறந்து வைக்கப்பட்டதுடன், இயந்திர உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

ஒருமில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த களஞ்சியசாலையுடன் இணைந்ததான கல் உற்பத்தி நிலையம் மட்டக்களப்பு வவுணதீவு  பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாமுனை கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையத்தினை மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.முரளிதரன், மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.நிர்மல்ராஜ், ஆகியோர் திறந்து வைத்ததுடன், உபகரணங்களையும் வழங்கி வைத்ததுடன் வேலையையும் ஆரம்பித்துவைத்தனர்.


இந்த நிலையத்தின் மூலம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அங்கத்தவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், கிராமத்தின் அபிவிருத்தியும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிது.

பிரதேசங்களில் பல்வேறு வீடமைப்புத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் வீடமைப்பு மற்றும் கட்டுமானப்பணிகளுக்கான கல்லுக்குத்தட்டுப்பாடு நிலவுகிறது. குறித்த கல் உற்பத்தி நிலையம் மூலம் கல்லுக்கான கேள்வியினை  ஈடு செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.