முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் சந்திர குமார் வீரதுங்க, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நிஷான் பெல்பிட்ட கோரளகே அனுஷ பெல்பிட்ட ஆகிய இருவரும் இன்று காலை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவருக்கும் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியரின் பரிந்துரைக்கு அமைய குறித்த இருவரும் நீரிழிவு நோய் நிலைமையினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் விகாரைகளுக்கு பௌத்த பக்தர்கள் அணியும் வெள்ளை நிற ஆடைகளுக்கான துணியினை (சீல் துணி) விநியோகித்தமை தொடர்பில் சட்டமா அதிபரினால் 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டதையடுத்தே இவ்வாறு தீர்பளிக்கப்பட்டது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி திஹான் குலதுங்க இந்த தீர்ப்பை வழங்கினார். கடூழிய சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக தலா 20 இலட்சம் ரூபாவை அபராதம் செலுத்தவும் தலா 500 இலட்சம் ரூபாவை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு நட்டஈடாக வழங்கவும் இதன் போது நீதிபதி உத்தரவிட்டார்.
நட்டஈட்டு தொகையினை எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி மற்றும் 2015 ஜனவரி மாதம் 5 ஆம் திகதி ஆகிய கால எல்லைக்குள் கொழும்பு மேல் நீதிமன்ற அதிகார பகுதிக்கு உட்பட்ட பிரதேசத்திலுள்ள இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபா, 1996 ஆம் ஆண்டில் 27 ஆம் இலக்க இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்த சட்டத்தி விதிவிதானங்களுக்கு மாற்றமான முறையில் (ஜனாதிபதி செயலாளர் ) எனும் பெயரிலான இலங்கை வங்கி கிளையில் 7040016 எனும் வங்கி கணக்கிற்கு சில் துணிகளை பகிர்வதற்காக வழங்கியமை தொடர்பில் 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் சட்டமா அதிபர் யுவஜன ஜவகர்லால் ஜனசுந்தர விஜய திலகவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பிரதிவாதிகளாக தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நிஷான பெல்பிட்ட கோரளகே அனுஷ பெல்பிட்ட, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் சந்திர குமார வீரதுங்கவும் பெயரிடப்பட்டிருந்தனர்.
முதல் பிரதிவாதியான அனுஷ பெல்பிட்டவுக்கு எதிராகவும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு எதிராகவும் தண்டனை சட்டக்கோவையில் 113 ஆ, 102 , 386 ஆகிய பிரிவுகளின் கீழும் 1982 ஆம் ஆண்டு 12 இலக்க பொதுச்சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 5(1) அத்தியாயத்தின் கீழும் 3 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை, அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை, அது தொடர்பில் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இருவருக்கு எதிராகவும் சுமத்தப்பட்டன. இதில் முதல் 2 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டவையும் 2 ஆம் 3 ஆம் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவையும் நீதிமன்றம் குற்றவாளிகளாக கண்டது.
அதனையடுத்து அவ்விருவருக்கும் எதிரான தீர்ப்பினை நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அதன்படியே குற்றாவாளிகளாக காணப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் தலா ஒன்றரை வருட சிறை தண்டனை வீதம் இருவருக்கும் தலா மூன்று வருட கடூழிய சிறைத்தண்ணடனையை மேல் நீதிமன்ற நீதிபதி திஹான் குலதுங்க அறிவித்தார்.
அத்துடன் இருவருக்கும் தலா 20 இலட்சம் ரூபாய் அபராத தொகையினையும் அவர் விதித்தார். இவற்றுக்கு மேலதிகமாக தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு ஏற்படுத்தப்பட்ட நட்டம் தொடர்பில் இருவரும் தலா 50 இலட்சம் ரூபா வீதம் நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டவும் சிறைக்காவலர்களால் பொறுப்பேற்கப்பட்டு கைவிலங்கு அணிவிக்கப்பட்டு சிறைச்சாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.
குறித்த இருவருக்கும் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியரின் பரிந்துரைக்கு அமைய குறித்த இருவரும் நீரிழிவு நோய் நிலைமையினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் விகாரைகளுக்கு பௌத்த பக்தர்கள் அணியும் வெள்ளை நிற ஆடைகளுக்கான துணியினை (சீல் துணி) விநியோகித்தமை தொடர்பில் சட்டமா அதிபரினால் 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டதையடுத்தே இவ்வாறு தீர்பளிக்கப்பட்டது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி திஹான் குலதுங்க இந்த தீர்ப்பை வழங்கினார். கடூழிய சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக தலா 20 இலட்சம் ரூபாவை அபராதம் செலுத்தவும் தலா 500 இலட்சம் ரூபாவை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு நட்டஈடாக வழங்கவும் இதன் போது நீதிபதி உத்தரவிட்டார்.
நட்டஈட்டு தொகையினை எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி மற்றும் 2015 ஜனவரி மாதம் 5 ஆம் திகதி ஆகிய கால எல்லைக்குள் கொழும்பு மேல் நீதிமன்ற அதிகார பகுதிக்கு உட்பட்ட பிரதேசத்திலுள்ள இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபா, 1996 ஆம் ஆண்டில் 27 ஆம் இலக்க இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்த சட்டத்தி விதிவிதானங்களுக்கு மாற்றமான முறையில் (ஜனாதிபதி செயலாளர் ) எனும் பெயரிலான இலங்கை வங்கி கிளையில் 7040016 எனும் வங்கி கணக்கிற்கு சில் துணிகளை பகிர்வதற்காக வழங்கியமை தொடர்பில் 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் சட்டமா அதிபர் யுவஜன ஜவகர்லால் ஜனசுந்தர விஜய திலகவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பிரதிவாதிகளாக தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நிஷான பெல்பிட்ட கோரளகே அனுஷ பெல்பிட்ட, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் சந்திர குமார வீரதுங்கவும் பெயரிடப்பட்டிருந்தனர்.
முதல் பிரதிவாதியான அனுஷ பெல்பிட்டவுக்கு எதிராகவும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு எதிராகவும் தண்டனை சட்டக்கோவையில் 113 ஆ, 102 , 386 ஆகிய பிரிவுகளின் கீழும் 1982 ஆம் ஆண்டு 12 இலக்க பொதுச்சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 5(1) அத்தியாயத்தின் கீழும் 3 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை, அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை, அது தொடர்பில் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இருவருக்கு எதிராகவும் சுமத்தப்பட்டன. இதில் முதல் 2 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டவையும் 2 ஆம் 3 ஆம் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவையும் நீதிமன்றம் குற்றவாளிகளாக கண்டது.
அதனையடுத்து அவ்விருவருக்கும் எதிரான தீர்ப்பினை நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அதன்படியே குற்றாவாளிகளாக காணப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் தலா ஒன்றரை வருட சிறை தண்டனை வீதம் இருவருக்கும் தலா மூன்று வருட கடூழிய சிறைத்தண்ணடனையை மேல் நீதிமன்ற நீதிபதி திஹான் குலதுங்க அறிவித்தார்.
அத்துடன் இருவருக்கும் தலா 20 இலட்சம் ரூபாய் அபராத தொகையினையும் அவர் விதித்தார். இவற்றுக்கு மேலதிகமாக தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு ஏற்படுத்தப்பட்ட நட்டம் தொடர்பில் இருவரும் தலா 50 இலட்சம் ரூபா வீதம் நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டவும் சிறைக்காவலர்களால் பொறுப்பேற்கப்பட்டு கைவிலங்கு அணிவிக்கப்பட்டு சிறைச்சாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.