2016ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண உற்பத்தித்திறன் விருதில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை இரண்டாமிடம்.

நேற்றைய தினம் கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் 2016ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபய குணவர்த்தன தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம, மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார திணைக்களங்களது செயலாளர்கள் உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர்.

குறித்த நிகழ்வில் இரண்டாவது இடத்தினை (B) grade ஆறு அரச அலுவலகங்கள்  பெற்றுக்கொண்டது.

இதில் எமது ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை இரண்டாமித்தினையும் விருது மற்றும் சான்றிதழ்கள் பெற்று பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.