இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவின் அத்தியட்சகர் T.H.R. சந்திரசிறி குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் ஆரம்பகட்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இறக்குமதி செய்யப்படும் பஸ்களை எந்தெந்த பகுதிகளில் சேவையில் அமர்த்துவது என்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் T.H.R. சந்திரசிறி மேலும் தெரிவித்தார்.
அதற்கமைய, விரைவாக பஸ்களை இறக்குமதி செய்து, அவற்றை எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் சேவையில் அமர்த்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.