வாகரையில் மிளகாய் அறுவடை விழா


மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கல்) பரமேஸ்வரனின் வழி நடாத்தலில் , வாகரை விவசாய போதனாசிரியர் பிரபாகரன் தலைமையில் மாவடியோடை , மாங்கேணி பிரதேச மக்களைக் கொண்ட மிளகாய் உற்பத்தியாளர் சங்கத்தினரால் செய்கை பண்ணப்பட்ட மிளகாய் அறுவடை விழா அண்மையில் இடம்பெற்றது.

இதன் போது விவசாய போதனாசிரியர் , மிளகாய் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரநிதிகள் உட்பட பிரதேச பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும் .