கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையின் 3வது ஆண்டு பரிசளிப்பு விழா

(கல்லடியூர் ஆனந்த்)



கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையின் 3வது ஆண்டு பரிசளிப்பு விழா 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு மட்/கல்லடி விநாயகர் வி;த்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு அறநெறிப் பாடசாலை அதிபர் திரு. சோ. சிவலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு. தியாகராஜா சரவணபவன் கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதிகளான கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையின் முன்னாள் தலைவர் திரு. வேலுப்பிள்ளை மேகநாதன், கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையின் முன்னாள் செயலாளர் திரு. ஏ.வு. நடராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.





 இப்பரிசளிப்பு விழாவில் எழுத்துப் பரீட்சை, பண்ணிசை, கோலம் போடுதல், பூமாலை கட்டுதல் போன்ற போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டது. இதில் அறநெறிப் பாடசாலை மாணவர்களினால் சமய சம்பந்தமான பேச்சுகள், நடனங்கள், நாடகம் என்பன நடாத்தப்பட்டது. இவ் அறநெறிப் பாடசாலை கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையினாலேயே நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் தற்போது 72 மாணவர்கள் அறநெறியைக் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.