அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் 5432 பேர் இணைப்பு

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் புதிதாக 5432 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் இவர்கள் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரச முகாமைத்துவ நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகம் திருமதி கே.பி.எம். கமகே தெரிவித்தார்.

இதற்கமைவாக வரையறுக்கப்பட்ட பிரிவில் இந்த சேவைக்காக 1377 பேரும் பகிரங்க போட்டிப் பரீட்சையின் மூலம் 4550 பேரும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

கடந்த வருடத்தில் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் அரச முகாமைத்துவ சேவையில் 6139 வெற்றிடங்கள் காணப்பட்டன.