வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக ஏமாற்றும் நபர்கள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிர்மலன் என்பவரிடம் ஏமாற்றமடைந்ததாக பாதிக்கப்படவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் ஓட்டமாவடி , காத்தான்குடியில் இருக்கு முகவர்களுக்கு கீழே இயங்குவதாகவும் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

 மட்டக்களப்பு சந்திவெளியை சேர்ந்த இவர் மத்திய கிழக்கு நாடுகளில்  அதிகம் சம்பளம் என கூறி ஆட்களை அனுப்பியுள்ளார்.  இதற்காக 120,000 - 140,000 பணமும் வாங்கியுள்ளார்.
1100 + 300 கட்டார் ரியால் சம்பளம் என கூறியுள்ளார்
ஆனால் இவர் கூறிய போல் அங்கு வேலை கிடைக்கவில்லை 700 + 200 கட்டார் ரியால் அதுவும் 3 மாதங்களுக்கு பின்பு தான் சம்பளம் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.  ஒரு சிலர் கடன் வாங்கி  வந்திருக்கிறோம் என்பதற்காக கிடைத்த வேலையே செய்து கொண்டு இருப்பதாகவும் பாதிக்கப்படவர்கள் கூறியிருந்தார்கள்.

மத்திய கிழக்கிற்கு வேலைக்கு செல்லும் நபர்கள் இவரிடம் ஏமாற வேண்டாம் என இவரால் பாதிக்கப்பட்டவர்கள்  குறிப்பிட்டனர்.

வாகரை போன்ற பிரதேசங்களில்  வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்புவது தொடர்பாக வருவதாக அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.