தபால் ஊழியர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம்!


அரசாங்கம் தங்களுடைய கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வினை பெற்றுக்கொடுக்காதமையால் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக தபால் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

சம்பளம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் ஜீன் 3ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தப் பேராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக, அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அரசாங்கம் வாக்குதியளித்தமையால் கடந்த ஜனவரி மாதம் முன்னெடுக்கவிருந்த போராட்டத்தை கைவிட்டதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு அரசாங்கத்தின் உறுதிமொழி இதுவரையும் நிறைவேற்றப்படாதமையால் மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.