நீர் வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில்


நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள் தற்போதைய நிலையில் அடையாள பணிப்புறக்கணிப்பொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

நூற்றுக்கு 25 சதவீத வேதன அதிகரிப்பு உள்ளிட்ட மேலும் 3 கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 9 மணி தொடக்கம் 4 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் , மேலதிக நேரம் மற்றும் வார இறுதி பராமரிப்பு செயற்பாடுகளில் இருந்து விலகியிருப்பதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்னாயக்க தெரிவித்தார்.