உயிரிழந்தாதாக இறுதிக்கிரியை செய்யப்பட்ட குழந்தை உயிர் பிழைத்ததால் பெரும் பரபரப்பு!

உயிரிழந்து விட்டதாக கருதி இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், குழந்தை ஒன்று உயிர் பிழைத்த சம்பவம், யாழ். சங்குப்பிள்ளையார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்து விட்டதாக கருதி இரண்டாவது முறையாகவும் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ள நிலையிலே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதியில் உள்ள இரண்டு வயது குழந்தை ஒன்றை காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் தெல்லிப்பளை மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த குழந்தை நேற்று முன்தினம் உயிரிழந்து விட்டதாக மருத்தவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நேற்றைய தினம் குழந்தைக்கு இறுதி கிரியைகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும், குழந்தையின் உடலில் இருந்து திடீரென சிறுநீர், வியர்வை மற்றும் மலம் என்பன வெளியாகியுள்ளது.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், குழந்தை உயிருடன் இருப்பதாக கருதி அந்த பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு கொண்டு சென்று உறவினர்கள் பிரார்த்தனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து மூன்று நாட்களை கடந்துள்ள போதிலும், உயிரிழந்தவர்களுக்கு உடலியல் ரீதியாக ஏற்படும் எந்த மாற்றமும் குழந்தைக்கு நிகழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த குழந்தை உயிருடன் இருப்பதாக முழுமையாக நம்பும் உறவினர்கள், குழந்தை விரைவில் நலம்பெற வேண்டும் என இறை பிரார்த்தனையில், ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.