லண்டனில் ராஜேஷ் வைத்யா கலந்துகொள்ளும் ராகமாலை இசை நிகழ்ச்சி ! சமூகபணிக்கான நிதி சேகரிக்கும் நிகழ்வு

லண்டன் லூசியம் கிரிக்கட் விளையாட்டு கழகத்தினால் சமூக பணிக்காக நிதி சேகரிக்கும் நிகழ்வாக   தென்னிந்திய வீணை இசைக்கலைஞர் கலைமாமணி ராஜேஷ் வைத்யா அவர்கள் கலந்து கொள்ளும் ராகமாலை இசை நிகழ்ச்சி இன்று லண்டனில் மாலை ஆறுமணியளவில் இடம்பெறவுள்ளது .

இதில் வரும் ஒரு தொகை  நிதியை   இலங்கையின் வட கிழக்கில் சமூக சேவைக்கு வழங்கவுள்ளனர் .

அம்பாறை மாவட்டத்தில்  யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட நான்கு பாடசாலைகளுக்கு விளையாட்டை ஊக்குவிப்பதற்காக   நான்கு இலட்சம் பெறுமதியான விளையாட்டு  உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது .