மின்னல் தாக்கி முதியவர் உயிரிழப்பு

 கரடியனாறு, மாவடியோடை பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி முதியவர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார்.


சத்திருகொண்டான் பகுதியைச் சேர்ந்த 60 வயதான சின்னதம்பி மனோகரன் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.


குறித்த முதியவர் இன்று வயல் வேலை நடவடிக்கையில் ஏனையோருடன் ஈடுபடும்போதே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.


இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை வைத்தியசாலைக்கு ஏனையோர் கொண்டு சென்றுள்ளனர். இதன்போது வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.


மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக செங்கலடி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.