சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2018ம் ஆண்டிற்கான சௌபாக்கியா விற்பனை கண்காட்சி





மட்டக்களப்பு மாவட்டத்தின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2018ம் ஆண்டிற்கான சௌபாக்கியா விற்பனை கண்காட்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் தலைமையில் 18ம் திகதி நடைபெறவுள்ளது.

முதல் தடவையாக மட்டக்களப்பு வரலாற்று மிக்க பழைய கல்லடிப்பாலத்தில் இக்கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் சமுர்த்தி வங்கியூடாக சுயதொழில் மற்றும் வாழ்வாதார கடன்களை பெற்ற சமுர்த்தி பயனுகரிகளின் உற்பத்திகளை காட்சிப்படுத்துவதுடன் விற்பனையையும் இடம்பெறவுள்ளது.

காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் இக்கண்காட்சியும் விற்பனையும் மாலை 8.00 மணிவரை நடைபெவுள்ளதாகவும் மட்டக்களப்பில் மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகத்தில் இருந்தும் சமுர்த்தி பயனுகரிகள் தங்கள் உற்பத்திகளை கொண்டு வரவுள்ளதாகவும் அதற்குரிய சகல நடவடிக்கைகளையும் அந்தந்த பிரதேச செயலக கருத்திட்ட சமுர்த்தி முகாமையாளர்கள் மேற்கொள்வார்கள் என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.ஏ.பாக்கியராஜா தெரிவித்துள்ளார்.