மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மனோ கணேசன் தலைமையில் மீளாய்வு கூட்டம்



தேசிய ஒருமைப்பாடு ,அரச கரும மொழிகள் , சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் மட்டு மாவட்ட செயலகத்தில் மீளாய்வு கூட்டம்

தேசிய ஒருமைப்பாடு ,அரச கரும மொழிகள் , சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை இன்று காலை வந்தடைந்த அவர் மாவட்ட செயலை கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பில் 16 கோடி ரூபா ஒதுக்கீட்டிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் தலைமையேற்று கலந்து கொண்டார் இக்கூட்டத்தில் அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.ரவீந்திரன் தமிழ் முற்போக்கு முன்னணியின் செயலாளர் எஸ்.பாஸ்கரா உதவிப்பணிப்பாளர் கே.கோபிநாத் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் ஆட்சிக்குழப்பதினால் தடைப்பட்ட வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பின்னர் என்னால் பெற்றுத்தரப்படுமென்றும் கிழக்கு மாகாணத்திற்கான மொழிப்பயிற்சி நிலையத்துக்கான புதிய கட்டிடம் விரைவில் மட்டக்களப்பில் நிறுவப்படும் என்றும் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார்

அத்துடன் செங்கலடி , சந்திவெளி, காத்தான்குடி , களுவாஞ்சிகுடி ,கொக்கட்டிச்சோலை போன்ற இடங்களுக்கான கள ஆய்வினையும் மேற்கொள்ளவுள்ளார்