மட்டக்களப்பில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கண்டு மயங்கி விழுந்த பொலிஸ் உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளார்.


மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டையில்  பகுதியில்   யானை தாக்கி இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளார்  ,

உயிரிழந்துள்ள 31 வயதான முத்துலிங்கம் நிரஞ்சலா  தனது வீட்டிலிருந்து மாமியாரின் வீட்டிற்கு சென்றபோது யானை தாக்கியுள்ளது ,

குறித்த பகுதிக்கு பொறுப்பான மரண விசாரணை அதிகாரி வருகை தராமையால்  நீண்ட நேரம் சடலம் சம்பவ இடத்திலயே வைக்கப்பட்டிருந்தது

சம்பவ இடத்திற்கு   ஏறாவூர் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றிருந்தனர்.  இதில் ஒருவர் சடலத்தை பார்வையிட்டபோது மயங்கி கீழே விழுந்த நிலையில் சந்திவெளி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்

பண்டாரவளையை சேர்ந்த 41 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்