சவுதி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு - இருவர் படுகாயம்!!

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பாறை மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழந்தவர் முகம்மட் ரிஹாஸ் உவைஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் மருதமுனையைச் சேர்ந்த மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சவுதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உணவு உண்பதற்காக மூவரும் சவுதி அதிவேகப் பாதை வழியே சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் இவர்கள் சென்ற வாகனத்துடன் மோதி விபத்து நடந்துள்ளது.

இவ்விபத்தில் சிக்கிய மூவரூம் மருதமுனையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், ஏனைய இருவரில் ஒருவரின் கால் ஒன்று அகற்றப்பட்டுள்ளதாகவும் மற்றையவர் கோமா நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.