இலங்கை பணிப்பெண்ணுக்கு துபாயில் 6 மாத சிறைத்தண்டனை

 இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு துபாய் நீதிமன்றத்தினால் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் பணிபுரியும் இல்லத்தின் உரிமையாளரின் மனைவியின் காருக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என துபாய் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

வழக்கு விசாரணையின் போது இலங்கை பணிப்பெண் தம் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.