சஹ்ரானின் முடக்கப்பட்ட சொத்து விவரம் நீதிமன்றில் அறிவிப்பு



உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுக்கு சொந்தமான முடக்கப்பட்டுள்ள சொத்துகளின் விவரத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அதன் தலைவர் சஹ்ரான் ஆகியோருக்கு சொந்தமான 1 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகள் மற்றும் 130 மில்லியன் ரூபாய் பெறுமதியான வங்கிக் கணக்குள் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.